மன்னன் உத்தான பாதனுக்கு மனைவியர் இருந்தனர் இருவர்; மிகவும் பிரியமானவள் சுருசி, மிகுந்த கர்வம் கொண்டவள். ஆதரவை இழந்து விட்ட சுநீதியோ அதிக இறை பக்தி கொண்டவள். மகன் துருவனையும் தன் போன்றே மாதவன் பக்தனாக வளர்த்தாள். சுருசியின் மகன் உத்தமனே மன்னனின் செல்லப் பிள்ளை; சுநீதியின் மகன் துருவனோ என்றும் மன்னனை நெருங்கவும் முடியாது. மன்னன் மடியில் அமர விரும்பியவனை மாற்றாந்தாய் தொல்லைகள் செய்யவே, தாயின் சொற்படி இறை அருள் வேண்டி ஏகினான் கானகம் பச்சிளம் பாலகன். முனி நாரதரிடம் உபதேசம் பெற்று மது வனத்தில் துவங்கினான் தவம். அன்னம், ஆகாரம், நீர், காற்று, உறக்கம் என்று படிப்படியாகக் குறைத்து விட்டான். ஐந்து வயது பாலகன் செய்து வந்த ஐந்து மாதத் தவத்தின் சுவாலை அனைத்து உலகங்களையும் வாட்ட, அருள் செய்ய விரைந்தான் பெருமான். கண்ணுக்குள் இருந்த அழகிய உருவம் காணமல் போய்விடவே துணுக்குற்றுக் கண்களைத் திறந்த துருவன் கண்டது கண் முன்னேயும் அதே உருவத்தை! புளகம் அடைந்து பேச்சற்றுப்போன துருவன் கன்னங்களை, மெல்லவே புன் சிரிப்புடன் வருடினான் தன் வெண் சங்கத்தால் நம் இறைவன்! துருவன் தவத்தை மெச்சி, அவனைத் துருவ நட்சத்திரமாக ஆக்கிவிட்டான்! அன்று மட்டும் அல்ல, இன்றுவரையில் அனைவருக்கும் வழி காட்டுவது துருவனே முதல் கமெண்டில் ஆழ்வார் பாசுரம் தாசன்பாலாஜி

0 comments:

Post a Comment