தியானம்!!!

தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!!
- Right Mantra Sundar
மெடிடேஷன் எனப்படும் தியானம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது. தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது. பிரமிப்பூட்டுவது. மிகப் பெரிய பிரச்சனைகளை சர்வசாதாரணமாக தீர்த்து வைக்கும் ஆற்றல் தியானத்துக்கு உண்டு. கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள பொக்கிஷத்தை கையருகே கொண்டு வரும் உன்னத கலை தியானம்.
ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சூரியனின் கிரணங்களுக்கு முன்பாக வையுங்கள். எவ்வளவு நேரமானாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் அதையே ஒரு குவி லென்ஸ் கண்ணாடி மூலம் சூரிய கதிர்களை ஒருமுகப்படுத்தி காட்டுங்கள். சில வினாடிகளில் காகிதம் தீப்பற்றி எரிய ஆரம்பித்துவிடும்.
மனதின் ஆற்றலும் இத்தகையது தான். ஒருமுகப்படுத்தப்படும் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கிறது. அது உடல், செயல், ஆற்றல் என அனைத்திலும் எதிரொலிக்கும்.
தியானம் என்பது வாழ்க்கை முழுவதற்குமே தேவைப்படும் ஒரு அம்சம் என்றாலும், மாணவர் பருவம் போன்ற வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு காலகட்டத்தில் தியானத்தின் தேவை முக்கியமானது. அதன்மூலம் மாணவர்கள் அடையும் நன்மை அளப்பரியது. அமைதியான மனம், சிறந்த தக்கவைப்பு, நல்ல ஆரோக்கியம், கவனம் மற்றும் ஒருமுகப்படுத்தும் சக்தி போன்றவை தியானத்தினால் கிடைக்கும் சில பிரதான நன்மைகள்.
பிளஸ் டூ பரிட்சைகள் நடக்கும் இந்நேரத்தில், தினமும் காலை 5 அல்லது 10 நிமிடங்கள் தியானத்துக்கு ஒதுக்குவது மாணவர்களுக்கு நல்லது.
சில மாணவர்களுக்கு ஒரு விஷயத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கவனம் செலுத்த இயலாது. தேர்வு நெருங்கும் சமயத்தில் புத்தகத்தை எடுத்து படிப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கும். அதை அவர்கள் அழுத்தமாகவும் உணர்வார்கள். தியானத்தின் மூலம் இந்த நிலையை மாற்றலாம்.
தியானம் என்றால் என்ன?
அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும். தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.
தியானத்தில் இறை அன்பு இருக்கிறது.
தியானம் நமது வாழ்க்கையை இனிதாக்கும்.
தியானம் கஷ்டங்களைப் போக்கிவிடும்.
தியானம் என்பது மனதை ஒருமுகப் படுத்தி இறைவனை நினைப்பது. தியானம் செய்பவரின் நோக்கம் மற்றவர்களையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும்.
தியானம் என்பது கடினமான விஷயம் அல்ல. அது மிக மிக எளிதான ஒன்று.
தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகளை இத்துடன் பட்டியலிட்டிருக்கிறோம். படித்து முடிக்கும்போது, நீங்களும் உடனே தியானம் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள் என்பது உறுதி.
தினசரி தியானம் செய்வோம். அளப்பரிய பலன்களை பெறுவோம்.
தியானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் 100 நன்மைகள் !
உடல் ரீதியான நன்மைகள்
1. பிராணவாயுவின் தேவையை குறைக்கிறது
2. மூச்சு விடும் சுற்றை குறைக்கிறது (ஒரு நிமிடத்துக்கு நாம் எவ்வளவு முறை மூச்சு விடுகிறோம் என்பது நமது ஆயுள் சம்பந்தப்பட்டது. குறைந்த மூச்சு நிறைந்த ஆயுள்!)
3. இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை இயங்க செய்கிறது
4. உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையை மாற்றி உடலை உடற்பயிற்சிக்கு தயார் செய்கிறது.
5. நம் உடலுக்கு அவ்வப்போது மிகவும் தேவையான ஆழ்ந்த ஓய்வை தருகிறது
6. அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தியானம் ஒரு மிகச் சிறந்த மருந்து
7. இரத்தத்தில் உள்ள lactic acid அளவை குறைத்து அச்ச உணர்வினால் ஏற்படும் நோய்களை பூரணமாக விரட்டுகிறது.
8. தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது.
9. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்ற நோய்கள் வராமல் காக்கிறது
10. பெண்களுக்கு மாதவிலக்கு தொடர்பான பயங்களை போக்கி அது சீராக இருக்க உதவுகிறது.
11. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்துகிறது
12. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
13. வைரஸ்களின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. மனக்கவலையை போக்குகிறது.
14. ஆற்றல், சக்தி, வீரியத்தை அத்கிகரிக்கிறது
15. உடல் எடையை கட்டுக்கள் I வைக்க உதவுகிறது
16. திசுக்களை பாதுக்காக்க உதவுகிறது.
17. தோலுக்கு பலம் கூடுகிறது. (Higher skin resistance)
18. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது
19. நுரையீரலுக்கு சரியான அளவு பிராணவாயு செல்ல உதவுகிறது.
20. முதுமையை ஒத்திப்போடுகிறது.
21. நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் Dehydroepiandrosterone என்ற ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உதவுகிறது.
22. நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த G உதவுகிறது.
23. வியர்வையை கட்டுப்படுகிறது
24. மைக்ரேன் மற்றும் தலைவழியை போக்குகிறது
25. மூளையை நன்கு இயங்கச் செய்கிறது
26. உடலுக்கான மருத்தவ தேவையை குறைக்கிறது
27. நமது சக்தி (எனர்ஜி) விரயமாகாமல் பாதுகாக்கிறது.
28. விளையாட்டு மற்றும் H இதர செயல்பாடுகிளில் ஆர்வத்தை தூண்டுகிறது
29. ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது
30. விளையாட்டு போட்டிகளில் நாம் சிறப்பாக விளையாட உதவுகிறது
31, உங்கள் உடலுக்கு தேவையான எடையை அளிக்கிறது
32. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது
33. நமது நரம்பு மண்டலத்தை பாதுக்கக்கிறது
34. மூளையின் மின் செயல்பாடுகளை பராமரிக்கிறது (brain electrical activity).
35. ஆண்மைக்குறைவை போக்குகிறது.
மன ரீதியான நன்மைகள்
36. தன்னமபிக்கையை அதிகரிக்கிறது
37. நமது இரத்தத்தில் செரோடொனின் அளவை அதகரித்து நமது மனோநிலையையும் நடத்தையையும் சரியாக இருக்க செய்கிறது
38. தேவையற்ற அச்சத்தை போக்கி பயம் சார்ந்த நோய்களை விரட்டுகிறது
39. நமது எண்ணங்களை M கட்டுப்படுத்துகிறது
40. நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி குறிக்கோளில் கவனம் செலுத்த உதவுகிறது.
Rightmantra Meditate Quote3
41. கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றலை அதிகரிக்கிறது
42. மூளையின் மொத்த சமச்சீர் செயல்பாட்டை (Brain wave coherence) அதிகரிக்கிறது
43. கற்கும் ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது
44. மனதுக்கு உற்சாகத்தையும் இளமையையும் தருகிறது
45. உணர்சிகளை கட்டுக்கள் வைக்க உதவுகிறது
46. உறவுமுறைகளை மேம்படுத்துகிறது
47. மூளைக்கு முதுமை ஒத்திப்போடப்படுகிறது.
48. தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றை விரட்டி விடுகிறது
49. உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.
50. நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது
51. வீட்டிலும் பணியிடத்திலும் சுமூகமான ஒரு சூழலை நமக்கு ஏற்படுத்தி தந்து உதவுகிறது
52. ஒரு சூழ்நிலையின் முழு பரிமாணத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது
53. சின்னஞ்சிறு அற்பத்தனமான A சச்சரவுகளில் ஈடுபடாமல் நம்மை காக்கிறது
54. மிக கடினமான பிரச்சனைகளை கூட எளிதில் தீர்க்க உதவுகிறது
55. நமது நடத்தையை சுத்தப்படுத்துகிறது
56. நமது WILL POWER அதிகரிக்க உதவுகிறது
57. வலப்பக்க மூளைக்கும் இடப்பக்க N மூளைக்கும் சரியான தொடர்பை ஏற்படுத்தி தருகிறது
58. இக்கட்டான தருணங்களில் சமயோசிதத்துடன் முடிவுகளை மேற்கொள்ள உதவுகிறது.
59. பார்ப்பவற்றை சரியாக உள்வாங்கும் திறனையும் நமது உடலின் தசைக்கூறு செயல்ப்பாட்டையும் மேம்படுத்துகிறது. (Perceptual ability and motor performance).
60. புத்தி சாதுரியம் கூட உதவுகிறது
61. செய்யும் வேளையில் பரம திருப்தி கிடைக்கிறது
62. நாம் நேசிப்பவர்களுடன் சரியான ஒரு உறவு முறையை கையாள உதவுகிறது.
63. மனநல குறைபாடுக்கான சத்தியங்களை T குறைக்கிறது
64. நமது சமூக செயல்பாடு மேம்படுகிறது
65. தேவையற்ற போர்குணத்தை (எதிர்மறையான) கட்டுப்படுத்துகிறது.
66. மதுப் பழக்கம் மற்றும் சிகரெட் பழக்கங்களை கைவிட உதவுகிறது
67. மருந்து, மாத்திரைகளுக்கான தேவைகளை குறைக்கிறது
68. உடலுக்கு தேவையான தூக்கத்தை கிடைக்க உதவுகிறது
69. ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் செல்ல R எடுத்துக்கொள்ள நேரத்தை குறைத்து தூக்கமின்மை நோயை விரட்டுகிறது
70. பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது
71. சாலையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் எரிச்சல் மற்றும் a வெறுப்புணர்வை போக்குகிறது. (Road rage).
72. அர்த்தமற்ற சிந்தனையை கட்டுபடுத்துகிறது
73. கவலையை போக்குகிறது
74. கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது. இரக்க குணத்தை A ஏற்படுத்துகிறது.
75. சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
76. சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது
77. ஆக்கப்பூர்வமான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவும் சிந்தனையை செலுத்தவும் உதவுகிறது
78. நமது ஆளுமையை மிக மிக சரியாக பராமரித்து சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தருகிறது.
79. உணர்வு ரீதியான பக்குவத்தை தருகிறது. (Emotional Maturity).
ஆன்மீக ரீதியிலான பலன்கள்
80. சரியான இடத்தில் சரியானதை வைத்து பார்க்க உதவுகிறது
81. மனஅமைதி, t மகிழ்ச்சியை தருகிறது
82. நமது வாழ்வின் குறிக்கோளை கண்டுபிடிக்க உதவுகிறது
83. நம்மை உணர்ந்துகொள்ள வழி செய்கிறது. (உன்னையறிந்தால்.. நீ உன்னையறிந்தால்….)
84. சகமனிதர்களிடம் கருணை காட்ட r உதவுகிறது
85. ஞானத்தை அதிகரிக்கிறது
86. நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறதுMeditation is gift
87. உடல், மனம், ஆன்மா மூன்றையும் மகிழ்ச்சியான சமனுக்கு கொண்டுவருகிறது.
88. ஆன்மீக m ரீதியில் மனம் லயிக்க உதவுகிறது
89. நம்மை நாமே விரும்ப உதவுகிறது.
90. பிறரின் தவறுகளை i மன்னிக்கும் சுபாவத்தை வளர்க்கிறது
91. வாழ்க்கை குறித்த நமது மனப்பாங்கை மாற்றுகிறது
92. கடவுளுக்கும் நமக்கும் ஒரு g நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகிறது
93. வாழ்விற்கு தேவையானவற்றை செய்ய உதவுகிறது. (Synchronization in your life)
94. மனசாட்சியை விஜிஹிப்புடன் வைத்திருந்து நாம் சரியான பாதையில் செல்ல n உதவுகிறது
95. நிகழ்காலத்தின் அருமையை h உணர்த்தி, நிகழ்காலத்தில் வாழ உதவுகிறது
96. பிறரால் நேசிக்கப்படுவதற்க்கான சாத்தியங்களை மேம்படுத்துகிறது.
97. ஈகோவை வெல்ல உதவுகிறது
98. நம் ஆழ்மனதின் ஆற்றலை அறிய உதவுகிறது
99. எல்லாம் அவன் செயல் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, இறைவனுடன் நமது பந்தத்தை அதிகரிக்கிறது.
100. ஞானோதயம் பெற வழி காட்டுகிறது.
===============================================================
தியானம் செய்வதால் ஏற்படும் பலன்களை சொல்லிடீங்க? ஆனா அப்படி தியானம் செய்றது? எனக்கு அது பத்திய அனா ஆவண்ணா கூட தெரியாதே என்று உங்களில் சிலர் நினைக்கூடும்.
அடுத்த பதிவில் தியானம் எப்படி செய்யவேண்டும் என்பது பற்றி எளிமையான முறையில் உங்களுக்கு விளக்கப்படும்!
(நாம் இதற்கு முன்பு தியானம் செய்திருக்கிறோம். இடையில் அது நின்றுவிட்டது. தற்போது மீண்டும் தினசரி செய்துவருகிறோம். பலன்களை பார்க்கத்தானே போகிறீர்கள்…!)
ஆரம்பத்துல 5 நிமிஷமும் அப்புறம் 15 நிமிஷமும் தினசரி தியானம் செஞ்சிட்டு வாங்க… அப்புறம் பாருங்க… நீங்க ஏங்கும் விஷயங்கள் உங்கள் மடியிலேயே வந்து விழும்!
தினசரி சில நிமிடம் போதுமே! தியானம் செய்வதால் கிடைக்கும் 100 பலன்கள்!! | RightMantra.com
RIGHTMANTRA.COM

கடவுளுடன் பேட்டி!!!

கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் !!!
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி…
என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில்
யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார்
கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!


கடவுளுடன் ஒரு பேட்டி – ஜென் கதைகள் !!!

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… 

என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…

“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”

-மீண்டும் கேட்டான்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…

“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் 
யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்…  ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் 
கடவுள். அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!

http://www.envazhi.com/

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

அஷ்டமி, நவமி என்றால் என்ன?
சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.
நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.
நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.
அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட் டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.
நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.
1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.
2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.
3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?
4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.
5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.
6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.
7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?
8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.
9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.
10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.
11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.
12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.
13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.
சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.
நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.
மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.
“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)
இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை(2 நாட்கள்).
ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.
ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?
என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?
Thanks - Sathishkumar Palanisamy


பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர் !!!

பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர் !!!
மனிதனாக பிறந்த நாம் அறிந்து
அறியாமலும் நித்தம் பல
பாவங்களை செய்து கொண்டுதான் 
இருக்கிறோம். அதன் பயனாய்
வறுமை, உடல் நலக்குறைவு,
காரியத்தடை, தீராத கவலை என
எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். அப்படி நம்மை பாடாய்படுத்தும் அந்த பாவங்களை களைய வழியே இல்லையா?, செய்த பாவங்களுக்கு பிரயாசித்தம்தான் என்ன? இனியாவது மனம் திருந்தி நல்வழியில் வாழ்ந்து மோட்ச நிலையை அடையமுடியாதா? என ஏங்குவோரும் நம் முன்னோர்கள் செய்த பாவங்களால் பிள்ளை இல்லாமல் போவது, குடும்பம் வறுமையிலே இருப்பது, அனைத்திலும் தோல்வி உண்டாதல், தீராத நோய்க்கு ஆட்படுதல் கை,கால் ஊனமாதல், மூளை வளர்ச்சி இன்மை, அற்ப ஆயுளில் மரணம் ஏற்படுதல் போன்ற பாவவினைகளை அனுபவிப்பவர்களும் இனியாவது மனசுத்தியோடு நீண்டகாலம் நிம்மதியாக வாழ்ந்து மோட்ச நிலையை அடைய இப்பதிவு ஒரு விளக்கின் ஒளி போல உங்களுக்கு வழிகாட்டடும்.
பாவங்கள் விலக மந்திரம்-அகத்தியர்
காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.
காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று
நீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே.
-அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:
உங்களின் பாவங்கள் நீங்க ஒரு சூட்சமத்தை சொல்கிறேன்
கேளுங்கள், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும்
யாருக்கும் எந்த பாவமும் செய்யாதிருந்தபோதிலும் உங்கள்
வாழ்வில் பாவங்கள் சேர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அது எப்படி என்றால் ஒருவன் செய்யும் பாவச்செயலை கண்டும்
அதை தடுக்காமல் போவதும்( கண்ணாரக் கண்டபாவம்),
தீய சொற்களையும், தீயவர்களின் வஞ்சகப்பேச்சுகளை,
அவச்சொற்களை கேட்பது(காதாரக் கேட்டபாவம்)
உங்கள் மனமகிழ்ச்சிக்காக பிறரை
துன்புறுத்துவது(மனதாரச் செய்தபாவம்) பெண்களை
கொடுமைப்படுத்து, பசுக்களை துன்புறுத்துவது ஓரறிவு முதல்
ஆரறிவு வரையிலான உயிர்களை கொன்ற பாவங்கள் உங்களின்
முன்னோர்கள் செய்த பாவமென எத்தனை கோடிப்பாவங்கள்
இருந்தாலும் அவைகள் நீங்க ஒரு சூட்சம
மந்திரத்தைசொல்கிறேன் கேளுங்கள்.
உடல் சுத்தியுடன் சுத்தமான இடத்தில் மான்தோல் விரித்து
(இன்றைய நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அதற்கு
நிகர் கம்பளியை விரித்து வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு
மூச்சை இடதுபக்க நாசியில் மெதுவாக இழுத்து அடக்கிக்கொண்டு
மனஓர்நிலையோடு மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை
108 -உரு செபிக்க வேண்டும். இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற
பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும்
என்கிறார் அகத்திய மாமுனிவர்.
S.கலைச்செல்வன் M.A @ http://arivumaiyam.blogspot.in/


ஞான கரையினி லே!!!

ஞான கரையினி லே ...............................
ஒருமுறை குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்....
குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு,குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
ஞான கரையினி லே ...............................

ஒருமுறை குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்....

குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு,குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.

ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
L

கண்ணன் செய்த நகை!

தக்க நேரத்தில் உதவியோரை, ‘கடவுளைப் போல் வந்து உதவினீர்கள்…’ என்போம். ‘தெய்வம் மனுஷ்ய ரூபனே’ என்று, ஞான நுால்கள் கூறுகின்றன. அதற்கு ஏற்றாற் போல் நடந்த வரலாற்றுச் சம்பவம் இது:
திரிலோசன தாசர் என்ற பொற்கொல்லர், மிகப் பிரபலமாக விளங்கியவர். இவர் கண்ணன் மேல் பக்தி கொண்டு, நாம கீர்த்தனை பாடுவோரை உபசரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு நாள், அவரிடம் நவாப்,’தாசரே… என் மகளின் திருமணத்திற்கு ஒரு நவரத்தின மாலை செய்ய வேண்டும்; ஏழு நாட்களுக்குள் அந்த மாலை வேண்டும்…’ என்றார்.
நவாப்பின் உத்தரவுப்படி பொன்னும், நவரத்தினங்களும் பெற்று தாசர் வீடு திரும்பினார்.
அச்சமயம், வீட்டிற்கு, பாகவத கோஷ்டியினர் பெரும் கூட்டமாக வந்தனர். அவர்களை கண்டதும், மகிழ்ச்சியுடன், அவர்களை உபசரிப்பதிலும், நாம சங்கீர்த்தனம் செய்வதிலுமே நாட்களை கடத்தினார் தாசர். பாகவதர்கள் விடைபெற்றுச் செல்லவும், நவாப்பின் வீரர்கள் வரவும் சரியாக இருந்தது.
‘திரிலோசனரே… இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன; அதற்குள் நவரத்தின மாலை வராவிட்டால், அரச தண்டனைக்கு ஆளாக நேரிடுவீர்…’ என, எச்சரித்து சென்றனர்.
பாகவத உபசரிப்பில், நவாப்பின் உத்தரவை மறந்து போயிருந்தார் தாசர். மாலை செய்ய குறைந்தது, நான்கு நாட்களாவது ஆகும். அதனால், நவாப்பின் தண்டனைக்கு பயந்து, யாருக்கும் சொல்லாமல் காட்டிற்கு போய் கண்ணனிடம் முறையிடத் துவங்கி, அங்கேயே தங்கி விட்டார்.
தாசரைப் போலவே உருமாறி, அவரின் வீட்டிற்கு போனார் பகவான். அன்று இரவுக்குள் நவரத்தின மாலையை செய்து முடித்து, மறுநாள் அரசவைக்கு சென்று, மாலையை கொடுத்தார். அதைப்பார்த்த நவாப், அதன் கலை நயத்தில் வியந்து, பொன் முடிப்புடன், மரியாதைகள் பல செய்து, ராஜ மரியாதையோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வீட்டில், ஒரு பாகவத கோஷ்டியினர் அவரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு சமாராதனை செய்து முடித்து, அவர்கள் புறப்பட்டதும், கையில் பலகாரங்களுடன் காட்டை நோக்கி நடந்தார் கண்ணன்.
வேறொரு அடியவராக உருமாறி, தாசரின் முன் நின்று, ‘ஐயா… திரிலோசன தாசர் வீட்டில் நடந்த சமாராதனையிலிருந்து இந்த பலகாரங்களை கொண்டு வந்தேன்; சாப்பிடுங்கள்…’ என்றார்.
தாசர் திடுக்கிட்டு, ‘நான் இங்கு இருக்கும் போது, என் வீட்டில் சமாராதனையா…’ என்று நினைத்து குழம்பியபடியே வீடு திரும்பினார். அங்கிருந்த சமாராதனை கோலாகலங்களைப் பார்த்ததும், தாசருக்கு ஒன்றும் புரியவில்லை; மனைவியை கேட்டார்.
அவள், ‘என்ன இப்படிக் கேட்கிறீர்கள்… நீங்கள் தானே நவாப்பிடம் நவரத்தின மாலையை கொடுத்து விட்டு வந்து, இப்படியெல்லாம் செய்தீர்கள்…’ என்று விரிவாக சொன்னாள்.
தாசருக்கு மெய் சிலிர்த்தது. ‘கண்ணா… என்னை காப்பாற்ற என் வடிவிலேயே வந்து அருள் செய்த உனக்கு, என்ன கைமாறு செய்வேன்…’ என்று கைகளை குவித்தார்.
தெய்வம் தன் அடியார்களை ஒரு போதும் கைவிடுவதில்லை.

Live dharshan - நேரடி ஒளிபரப்பு மூலஸ்தானத்தில் இருந்து!!!

    12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

    1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

    2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

    3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

    4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

    5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

    6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

    7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

    8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

    9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

    10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

    11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

    12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

      

    சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)


     live dharshan -  நேரடி ஒளிபரப்பு  

     http://www.somnath.org/live-darshans.aspx 


    மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



     live dharshan - நேரடி ஒளிபரப்பு  

    http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm 


    ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



    live dharshan - நேரடி ஒளிபரப்பு   

    http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

     
    காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




    live dharshan - நேரடி ஒளிபரப்பு   

    http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

      


ஷிர்டி சாயிபாபா கோவில்

ஷிர்டி சாயிபாபா கோவில் 

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு  

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு 

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html 
 
Or 

http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser )

                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBHExa4Pqb9JqPtSCzmlcOa7ybsiG-fy3DHBZkSKFihgEhAnOZrrKAavdkJBw-Czs440jyLTyGuaHOR0pBZ9iYjxhyphenhyphenMSw_K1KaP9YSewW19_ZrxeDlpd_E9UwI0v5pYB0yBuN8jF_lSfyd/s728/sai_gold_full.jpg

"பாபா.." இந்தப்பெயரை உச்சரிக்காத வட இந்தியர்கள்.. அதுவும் மராட்டிய மக்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பாபா..' என்ற சொல்லுக்கு, அப்பா.. தந்தை, தாத்தா இப்படி பல அர்த்தங்கள் இருக்கு. 'ஆயி.. பாபா..'ன்னுதான் இங்கே அம்மா அப்பாவை அழைக்கிறாங்க. மகான்களையும் அப்படியே அவங்க வயசை உத்தேசிச்சு, 'தந்தையே..' என்ற பொருள்பட 'பாபா..'ன்னு வடக்கர்கள் அழைக்க, நாமும் அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டோம். காலப்போக்கில் மகான்கள் என்றாலே பாபான்னு ஆகிடுச்சு.

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இவரது பிறந்த தினம் 1838-ல் செப்டம்பர் மாசம் 28ஆம் தேதின்னு உத்தேசமா சொல்லப்படுது. தன்னோட பதினாறாம் வயசுல இவர் ஷிர்டிக்கு வந்திருக்கார். மூணு வருஷத்துக்கப்புறம் திடீர்ன்னு காணாமப்போயி ஒரு வருஷத்துக்கப்புறம் திரும்பவும் வந்து ஷிர்டியில் நிரந்தரமா தங்கிட்டார். அதாவது அவர் இறந்த, 1918ஆம் வருஷம் அக்டோபர் 15ஆம் தேதிவரையிலும் .

ஷிர்டிக்கு திரும்பி வந்தப்புறம், ஒரு வேப்பமரத்தடியை தன்னுடைய வசிப்பிடமா ஆக்கிக்கிட்டு, சில சமயங்களில் அங்கியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாராம். கொஞ்ச காலத்துக்கப்புறம் அங்கிருந்த மசூதியில் தங்க ஆரம்பிச்சுருக்கார். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிச்ச அவர், தன்னோட மற்றும் தன்னைச்சார்ந்தவர்களோட உணவுத்தேவைகளை யாசகம் கேட்டு பூர்த்தி செஞ்சுக்கிட்டிருந்திருக்கார். பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது. அந்த சாம்பல் பிரசாதமாவும் கொடுக்கப்படுதாம்.
( துனியிலிருந்து வரும் புகை..)

பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையானவர். கஃபன் என்றழைக்கப்படும் உடம்பைச்சுற்றிய காவித்துணி, தலையை மூடியிருக்கும் இன்னொரு காவித்துணி இவ்வளவுதான் அவரோட சொத்து. இந்து முஸ்லிம் ஆகிய ரெண்டு மதங்களுக்கும் பொதுவானவர் இவர். இதுக்கு, இந்தக்கோயிலுக்கு வர்ற கூட்டமே சாட்சி. தான் தங்கியிருந்த மசூதிக்கு 'த்வாரகாமாயி'ன்னு பேர் சூட்டியிருக்கார். அதேசமயம் அந்த மசூதியில் ரெண்டு மத சம்பிரதாயங்களின்படியும் பூஜைகளும் நடக்குது. இறைவனே தலைவன், ஒருவனே தேவன் என்ற பொருள்படும் பாபாவின் திருவாய்ச்சொற்களான 'அல்லா மாலிக்'.., மற்றும் 'ஸப்கா மாலிக் ஏக் ஹை.' இங்கே ரொம்பவும் புகழ்வாய்ந்தது.

பாபா மசூதியில் தங்கியிருந்தப்ப, ஒவ்வொரு நாள் இடைவெளிவிட்டு இங்கேயிருக்கும் சாவடிக்கு தங்கறதுக்காக போவாராம். அதை நினைவுகூரும் விதமா, பால்கி எனப்படும் பல்லக்கு சேவை நடக்குது. பல்லக்கில் பாபாவின் உருவப்படத்தை வெச்சு, சமாதி மந்திரிலிருந்து த்வாரகாமாயிக்கு கொண்டுபோயிட்டு அங்கிருந்து சாவடிக்கு போவாங்க. அப்புறம் மறுபடி சமாதி மந்திருக்கு திரும்பிவந்து ஆரத்தி எடுப்பாங்க இதுக்கு ஷேஜ் ஆரத்தின்னு பேரு.
எங்கே எந்த சன்னிதி இருக்குன்னு இப்ப தெளிவா புரிஞ்சுபோச்சு..

கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கியிருக்காங்க. முதல்ல போனப்ப, கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு,  நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க. நுழைவாசலில் ஆண்களுக்கு மட்டும் தடவல் சோதனை உண்டு.

லேண்டி பாக் பக்கத்துல இருக்கிற ரெண்டாம்கேட் வழியா நுழைஞ்சோம். 'பாக்& பகீச்சா'ன்னு சொன்னா தோட்டம்ன்னு அர்த்தம். இந்த லேண்டி பாக்கும், அதுல இருக்கிற கெணறும் பாபா தன் கையாலயும், ஊழியர்களின் உதவியாலயும் உருவாக்கினது. கெணத்தை வலைபோட்டு மூடிவெச்சிருக்காங்க. அங்கே ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில பாபா ஏத்திவெச்ச அகல் இப்பவும் எரிஞ்சுக்கிட்டிருக்காம், நம்மூர்ல அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.

தரிசனத்துக்காக வரிசையில் நின்னு நுழைஞ்சோம். அதிகம் கூட்டமில்லை, படிகள் வழியா ஏறி, இறங்கி, யூ டர்ன் எடுத்துன்னு எப்படியோ, போயிக்கிட்டே இருக்கோம். ஒவ்வொருத்தர் கையிலும் காணிக்கையா கூடைகள். அதுல பூ, மாலைகள், சரிகைச்சால்வை, சாதாரண சால்வை, அப்புறம் பேடா பாக்கெட் இல்லைன்னா உலர்பழங்கள் இல்லைன்னா கடிஷக்கர்ன்னு இங்கே சொல்லப்படும் சீனி உருண்டைகள். இந்த சால்வைகளை பாபாவுக்கு சாத்திட்டு வீட்டுல பிரசாதமா வெச்சுப்பாங்களாம்.  கடைசியில் ஒருவழியா பாபாவுக்கு முன்னாடி வந்தே வந்துட்டோம் ஜஸ்ட் பத்து நிமிஷத்துல. நீளமான ஹால். அந்தக்கோடியில் தகதகன்னு மார்பிள் மேடையில் மினுங்கும் சிம்மாசனத்தில் பாபா.


பாபாவின் சமாதி இருக்கறதால சமாதி மந்திர்ன்னு அழைக்கப்படும் இந்த இடத்தில் முரளீதரன் அதாவது நம்ம குழலூதும் கண்ணனுக்கு கோயில் அமைக்கணும்ன்னு நாக்பூரைச்சேர்ந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்ற பணக்காரர் ஏற்பாடு செஞ்சுருக்கார். சிலைகளும் ரெடியாகி வந்துட்டதாம். ஆனா, பாபா.. தானே முரளிதரனாக ரூபமெடுத்துக்காட்ட எல்லா தெய்வங்களும் ஒன்னுதான்னு தெளிஞ்ச கோபால்ராவ், அந்த இடத்தை பாபாவுக்கே கொடுத்துட்டாராம். சிலைகள் இப்போ கோயிலின் மியூசியத்தில் இருக்குன்னு கேள்வி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie2GdEja5l8nemN-j-rcqqIWlfbKTpj-LwOQvbOOqR44q_yyZsI2xS-Ge_M6ucmifGzdjjODzETTHSSkDteCACD_LN9nDmsRMDBPxYcR1RTrrPjumewbckCbDUp8gpVNd-Wwpg6F_MSnc/s1600/baba_samatji.jpg

மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம்.  இந்த சிலை திரு. பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டதுன்னு கூகிளார் சொல்றார். சமாதி மேடையின் முன்னால் அழகான தங்கத்தால்  வேயப்பட்ட ரெண்டு தூண்கள். அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கத்தால் தகதகன்னு மின்னுது.

பக்தர்கள் கொண்டுவர்ற மாலைகளை பாபாவுக்கு போட்டுட்டு, ஏற்கனவே சாத்தியிருக்கற மாலைகளில் ஒன்னை உருவி பிரசாதமா தர்றாங்க. தடுப்புக்குள்ளாற மெதுவா நகர்ந்து முன்னாடி போய் நின்னதும், சும்மா அந்த முகத்தைப்பாத்துட்டே நின்னேன். ஒண்ணுமே நினைக்கவோ வேண்டிக்கவோ தோணலை.. அதான் நிஜம். திருப்பதி மாதிரி இங்கியும் ஜருகண்டி இருக்குது.. ஆனா, இன்னும் தள்ளிவிட ஆரம்பிக்கலை. சும்மா வாய் வார்த்தையாலயே, பஸ் கண்டக்டர் மாதிரி, 'ச்சலா.. ச்சலா... ப்பூடே ச்சலா..' அவ்ளோதான்.  தரிசனம் முடிச்சுட்டு திரும்பும்போது பாபாவை பார்த்தமாதிரிக்கே ரிவர்ஸில் நடக்கறாங்க சிலபேர். திருப்பதியிலும் இதை பாத்திருக்கேன்.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQRC2SWhryDzaExxWCFt6CbMs4TE61wYe5pqS3gQMi4aC_bXHzIow


தரிசனம் முடிச்சுட்டு வெளியே வந்தப்ப லேசா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. அதனால, ஓட்டமும் நடையுமா எல்லா சன்னிதிகளையும் வெளியில நின்னே கன்னத்துல போட்டுக்கிட்டோம். பாபா தங்கியிருந்த வேப்ப மரத்தடியிலும் ஒரு சிலைவெச்சு சின்னதா கோயில் கட்டியிருக்காங்க. அவர் வளர்த்த குதிரைக்கும் அங்கியே சமாதி இருக்குது. த்வாரகாமயியையும், மியூசியத்தையும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. ம்யூசியமாவது ஏற்கனவே பார்த்ததுதான்.பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவருடைய ஆடைகளையும் பார்வைக்கு வெச்சிருக்காங்க. த்வாரகா மயியை அடுத்ததடவைக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. அவர் உபயோகப்படுத்தின பொருட்களெல்லாம் அங்க இருக்குதாம். இந்தக்கோயிலைப்பத்தின விவரங்கள் அனைத்தும் இங்கே இருக்குது. தேவையானதை க்ளிக் செஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்துட்டே இருக்குது. அது கோயில் முழுக்க ஒலிக்கிறமாதிரி அங்கங்க ஒலிபெருக்கிகள் வெச்சிருக்காங்க. புத்தக ஸ்டால் ஒண்ணும் பார்த்தேன். அனேகமா கோயில்களைப்பத்தினதாத்தான் இருக்கணும்.

நாலாவது கேட் கிட்ட இருந்த பிரசாத ஸ்டாலில் லட்டுபிரசாதம் வாங்கிட்டு, அங்கியே பக்கத்தில் இளநி குடிச்சுட்டு புறப்பட்டோம்
படங்கள் தந்துதவிய கூகிளாருக்கும், கூடவே வந்த உங்களுக்கும் நன்றி..



இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

 இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

1)   Shri Omkareshwar Jyotirlinga,Madhya Pradesh 

ஸ்ரீ ஓம் காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசம் 

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR_82nzlEtQTXr0V0fe0OnqT25XGV_QeLqd-VjGPkzbxA-uexo0ww http://www.goheritageindiajourneys.com/blog/wp-content/uploads/2012/11/Sri-Vaidyanath-Jyotirlinga-in-Parali.jpg 

http://blessingsonthenet.com/img/uploads/tour/aim_bn_1313987256.jpg  http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRzuSujOeWoF0JcV4A3iJUMx3YPQEY2di5jqjfLheyktf3KAUZU

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSl9BMpwLMJjCjhLuI_dETIojcn1D0OikTvqMFKY8LX_nhl_9ma  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWadKQIjz0iN9DbY-DTihLpQALh7MCzIHKozu4g37PGuKrxCpC_gAJV1GGwekP2sfBxKeLWutRsDPbEzHHaOEQ6J-8dQG0ngqGMtYRKFSnv33SEmNtSB4Sh9na4F4V76-iv5lIZS2LoGs/s400/Omkareswar1.jpg


http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 





2)மஹா வீர்  மந்திர் ( கோவில் ) ஹனுமான்  கோவில் patna - BIHAR 

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU2_uNT5gPsZ1r3GLBUiikz_7hTY-qEAGpiIe0MepLovpJGTpg http://www.mahavirmandirpatna.org/images/darshan.jpg
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSVUd_UHvRuvtMcdBNfQbrOl--ADAKXxB9ZAw3Ap8e1JV1h6qLRgw http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCPcaNYH5YNflPvZ-bZF1gq3R8m4vNR92VvsQeGWQl73IlEaJNUQ



http://www.mahavirmandirpatna.org/



3)ஆஷாபுரி மாதா ராஜஸ்தான் 


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d2/Ashapura_(Ghumli).JPG/200px-Ashapura_(Ghumli).JPG https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDUiQ5daaymGwrpkG-swamY7RiCeaXLOGa2sCGZ20sNknJUn1ES42kgIvOVYwe-4N5SDUe_ZlKSkn_QtI-nRYt9Wdd6yV8dYzRqzxxh30Jzb0EQttA6ZUmqp3WBq9k8PwQ7WbCBmudy9kM/s400/nadoleashapuraji.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYcQeRu2qpBxzmJpU-8mD-gmHHIoMrY1hjF6FcwxFVXhZBno_VOZzurLZ-GLK8SLy4a_0amhhAHIhw78kSYHDQkyMaIm52wbsKdQiPGJqPPFRB4zIhcmUqxoexTcQDvW33TEuSbw6lUGOQ/s1600/modramata.jpeg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/27890869.jpg



http://modramata.com/Darshan/Live-Darshan.php


4)ஸ்ரீ கோபிநாத்ஜி மகாராஜ்  -  கதாடா--  பாவ்நகர் --- குஜராத் 

SHRI GOBHINATHJI MAHARAJ - GADHADA CITY - IN BHAVNAGAR DISTRICT - IN GUJARAT

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/71/Gadhada_Swaminarayan_Temple.jpg/280px-Gadhada_Swaminarayan_Temple.jpg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/25858686.jpg

http://cdn1.images.touristlink.com/data/cache/TH/EH/EA/DQ/UA/RT/E/shri-swaminarayan-mandir-vadtal-the-headquarters-o_400_300.jpg http://gopinathji.com/photo/103.jpg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRQBxrd27uxYYF7kBZTwRmWVOgrBGuKGZzr7xnOpht5B9GLWxLb     http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTty4xDiRVeWTJ4R3433yJcSUb8j9M6Zzf7jxTCdXT5Y1j8hLChhg




http://gopinathji.com/darshan.html



5)Shreemant Dagdusheth Halwai Sarvajanik Ganpati 
Pune, Maharashtra


கணபதி கோவில் பூனா , மகாராஷ்டிரா

 

http://dagdushethganpati.com/en/live-darshan.php