பகவத் கீதை தெரியும்... உத்தவ கீதை தெரியுமா?
==============================
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன் என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.
பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.
உத்தவரே! அன்று குருஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள் என்றான் பரந்தாமன்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்; கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்? நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றான் கண்ணன்.
கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பயணம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரவுபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா? என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால் தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க,
கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றார் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.
தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான். ஐயோ.... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்;
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ஹரி.... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.
அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான் கண்ணன். அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?
புன்னகைத்தான் கண்ணன். உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம் என்றான்.
நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே? என்றார் உத்தவர்.
உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.
எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வு தானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
—
The Soul Leaving The Body!!!
Scientist Photographs The Soul Leaving The Body
The timing of astral disembodiment in which the spirit leaves the body has been captured by Russian scientist Konstantin Korotkov, who photographed a person at the moment of his death with a bioelectrographic camera.
The image taken using the gas discharge visualization method, an advanced technique of Kirlian photography shows in blue the life force of the person leaving the body gradually.
According to Korotkov, navel and head are the parties who first lose their life force (which would be the soul) and the groin and the heart are the last areas where the spirit before surfing the phantasmagoria of the infinite.
In other cases according to Korotkov has noted that "the soul" of people who suffer a violent and unexpected death usually manifests a state of confusion in your power settings and return to the body in the days following death. This could be due to a surplus of unused energy.
Scientist Photographs The Soul Leaving The Body ~ ADG (UK)
Quarterly News Letter of Sahaj Marg
Dear Sister / Brother:
The quarterly newsletter detailing the activities of the Sahaj Marg Spirituality Foundation may be found at the following URL:
The quarterly newsletter detailing the activities of the Sahaj Marg Spirituality Foundation may be found at the following URL:
Thank you.
SMSF Newsletter Team
அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள்!!!
அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் ,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல்.
http://www.ziddu.com...YZ.PDF.pdf.html
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை சாஸ்திரம் " - மூலமும் , உரையும் மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் - அடங்கிய , புராதனமான நூல்.
http://www.ziddu.com...astram.pdf.html
திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்
http://www.ziddu.com...-Tamil.pdf.html
மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய , தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்
http://www.ziddu.com...asveda.pdf.html
கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.
தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம்.
http://www.ziddu.com...igalum.pdf.html
தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம்.
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
http://www.ziddu.com...-Tamil.pdf.html
சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய துதிகள் :
http://www.ziddu.com...-Tamil.pdf.html
மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )
http://www.ziddu.com...r-Nool.pdf.html
http://www.ziddu.com...-Nool1.pdf.html
http://www.ziddu.com...-Nool2.pdf.html
இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள , சித்தர்கள் பற்றிய கட்டுரை.
- யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை
http://www.ziddu.com...Yagobu.pdf.html
பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...mbatti.pdf.html
போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...Bhogar.pdf.html
கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை:
http://www.ziddu.com...uvurar.pdf.html
நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற - மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...rrajar.pdf.html
மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை
http://www.ziddu.com...hadevi.pdf.html
மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை
http://www.ziddu.com...Nu-Jar.pdf.html
- சப்த ஸ்தானங்களில் , சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை
http://www.ziddu.com...amigal.pdf.html
மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...endrar.pdf.html
ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...nkarar.pdf.html
ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு :
http://www.ziddu.com...a-Veer.pdf.html
http://www.ziddu.com...BC.PDF.pdf.html
புத்தரை பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...Buthar.pdf.html
உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து , பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உயர்திரு . வரத பண்டிதர் அவர்களால் - சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் , எழுதப்பட்ட - பிள்ளையார் கதை என்னும் நூல்.
http://www.ziddu.com...YZ.PDF.pdf.html
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான , ஜோதிட , சாஸ்திரங்களில் வல்லுனராகிய சகாதேவர் திருவாய் மலர்ந்தருளிய - " பாச்சிகை சாஸ்திரம் " - மூலமும் , உரையும் மற்றும் - தேவதா சக்கர தொடுகுறியும் - அடங்கிய , புராதனமான நூல்.
http://www.ziddu.com...astram.pdf.html
திருப்பதி மகிமைகள் - பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய புத்தகம்
http://www.ziddu.com...-Tamil.pdf.html
மிகுந்த சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள் அடங்கிய , தமிழ் விளக்கத்துடன் அடங்கிய நூல்
http://www.ziddu.com...asveda.pdf.html
கோவில்களும், தெய்வீக முயற்சிகளும் - என்கிற அருமையான புத்தகம்.
தவற விடக் கூடாத அருமையான தகவல்கள், அடங்கிய புத்தகம்.
http://www.ziddu.com...igalum.pdf.html
தவயோகி . தங்கராசன் அடிகளார் எழுதிய " ஆன்ம தரிசனம் " புத்தகம்.
யோகம், இயமம், தியானம் பற்றி எழுதப்பட்டுள்ள , இல்லறத்தில் இருப்பவர்களும் கடை பிடிக்கத் தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது. தீவிர ஆன்ம தேடல் இருப்பவர்களுக்கு - இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.
http://www.ziddu.com...-Tamil.pdf.html
சித்தகளை பூஜை செய்ய முறைப்படி செய்ய வேண்டிய துதிகள் :
http://www.ziddu.com...-Tamil.pdf.html
மகான் காக புஜண்ட மகரிஷி ஆசி நூல் : (மிக அபூர்வமானது )
http://www.ziddu.com...r-Nool.pdf.html
http://www.ziddu.com...-Nool1.pdf.html
http://www.ziddu.com...-Nool2.pdf.html
இந்திரா சௌந்தர்ராஜன் தனது சித்தர்கள் ராஜ்ஜியத்தில் எழுதியுள்ள , சித்தர்கள் பற்றிய கட்டுரை.
- யாக்கோபு சித்தர் பற்றிய கட்டுரை
http://www.ziddu.com...Yagobu.pdf.html
பாம்பாட்டிச் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...mbatti.pdf.html
போகர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...Bhogar.pdf.html
கருவூர் சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை:
http://www.ziddu.com...uvurar.pdf.html
நாத வடிவிலே இறைவனை துதித்து , அவர் தரிசனம் பெற்ற - மகிமை மிக்க மகான்கள் வரிசையில் தியாகராஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...rrajar.pdf.html
மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - அன்னை ஸ்ரீ சாரதாதேவி பற்றிய சிறப்புக் கட்டுரை
http://www.ziddu.com...hadevi.pdf.html
மகிமை மிக்க மகான் - ஸ்ரீ ராமானுஜர் பற்றிய சிறப்புக் கட்டுரை
http://www.ziddu.com...Nu-Jar.pdf.html
- சப்த ஸ்தானங்களில் , சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழு கோவில்களில் ஒரே நேரத்தில் தோன்றி கும்பாபிசேகம் செய்த , மிக சக்தி வாய்ந்த - மாமுனிவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் பற்றிய கட்டுரை
http://www.ziddu.com...amigal.pdf.html
மகிமை மிக்க மகான்கள் வரிசையில் - பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...endrar.pdf.html
ஆதி சங்கரர் பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...nkarar.pdf.html
ஜைன மதத்தை தோற்றுவித்த - மகா வீரர் பற்றிய , அருமையான கட்டுரை தொகுப்பு :
http://www.ziddu.com...a-Veer.pdf.html
http://www.ziddu.com...BC.PDF.pdf.html
புத்தரை பற்றிய சிறப்புக் கட்டுரை :
http://www.ziddu.com...Buthar.pdf.html
உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது , மொத்த புத்தகங்களையும், ஆழ்ந்து , பொறுமையுடன் படியுங்கள். உங்களுக்குத் தேவையான , பல தகவல்கள் இதில் அடங்கி இருக்கின்றன.
Eternal Vision - SRCM Video
மாஸ்டருடைய வீடியோ or ஆடியோ பேச்சுகளுக்கு இந்த லிங்குங்க்கு செல்லவும் :Masters Talk
Research Books written by K.C. Narayana!!!
![]() | |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperience

Training

Research

Workshops

Seminars

Manasarovar

Subscribe to:
Comments (Atom)




